பிறப்புறுப்பில் லத்தியை செலுத்தி சித்திரவதை: உயிரிழந்த பெண் கைதி! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

பிறப்புறுப்பில் லத்தியை செலுத்தி சித்திரவதை: உயிரிழந்த பெண் கைதி!

மும்பையில் உள்ள பெண்கள் சிறையில், ஒரு கைதியை அடித்து சித்தரவதை செய்ததோடு, அவரின் பிறப்புறுப்பில் லத்தியை விட்டதால், ரத்தம் பெருக்கெடுக்க உயிர் இழந்துள்ளார்.
மும்பையில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் மஞ்சுலா கோவிந்த் செட்டி. இவர் இரு தினங்களுக்கு முன் காலை உணவாக வழங்கப்பட்ட இரண்டு முட்டை, 5 ரொட்டிகள் எனக்கு கிடைக்கவில்லை என சிறை அதிகாரியிடம் முறையிட்டார்.
இவரின் இந்த கேள்வியால் அவரின் உயிரையே பறித்துவிட்டனர் அந்த சிறைகாவலர்கள். ஆத்திரம் அடைந்த அந்த சிறைக் காவலர்கள் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அங்கு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அவருடன் சிறையில் இருக்கும் சில கைதிகளின் சாட்சியப்படி, மஞ்சுலாவை அந்த சிறை காவலர் ஒரு தனி அறைக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரை அடித்து கொடுமை படுத்தியுள்ளார்.
அதோடு அங்கு வரவழைக்கப்பட்ட மேலும் சில காவலர்கள், அவரை அடித்துள்ளனர்.
இதனால் அவரின் உடல் முழுவதும் காயம் அதிகளவில் இருந்தது. அதுமட்டுமில்லாமல், கைதியின் பிறப்புறுப்பில் லத்தியை விட்டு கொடுமை செய்துள்ளனர்.
அதனால் மஞ்சுலா ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

About UK TAMIL NEWS