மன்னாரில் கவச வாகனங்களுடன் இராணுவத்தினர் குவிப்பு : பதற்றத்தில் மக்கள் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

மன்னாரில் கவச வாகனங்களுடன் இராணுவத்தினர் குவிப்பு : பதற்றத்தில் மக்கள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய நிலையில் இன்று  காலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 ஏன்? எதற்காக? குறித்த பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர் என்ற விடயம் தெரியப்படுத்தப்படவில்லை.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இராணுவத்தின் கவச வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் மக்கள் மத்தியில் சற்று அச்ச நிலை ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

About Unknown