கைத்தொலைபேசி பாவனை மற்றும் செல்ஃபி மோகத்தால் ரயிலில் மோதுண்டு 22 பேர் பலி!! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

கைத்தொலைபேசி பாவனை மற்றும் செல்ஃபி மோகத்தால் ரயிலில் மோதுண்டு 22 பேர் பலி!!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் செல்ஃபி புகைப்படம் எடுத்தல் மற்றும் கைத்தொலைபேசி பாவனை காரணமாக 22 பேர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி புகைப்படம் எடுக்க முயற்சித்த சகோதரர்கள் நேற்று பிற்பகல் கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலில் மோதி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ரயில் பாதையில் கைத்தொலைபேசி பயன்படுத்திச் சென்றமை மற்றும் செல்ஃபி எடுக்க முயற்சித்தமை முதலானவற்றின் காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் பாதையில் இடம்பெறும் இவ்வாறான அனர்த்தங்களை தவிர்க்கவும் மற்றும் ரயில் சேவையில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About UK TAMIL NEWS