வெள்ளவத்தை கடற்பரப்பில் படகு கவிழந்து விபத்து! பலர் மாயம் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

வெள்ளவத்தை கடற்பரப்பில் படகு கவிழந்து விபத்து! பலர் மாயம்

வெள்ளவத்தை கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்று இன்று காலை 10 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த படகில் இருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், படகில் இருந்த இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About UK TAMIL NEWS